ஆழியார் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த உயரமான 120 அடியில் 115 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக கரையோர மக்கள் ஆடு,மாடு மேய்ப்பதற்காக செல்ல வேண்டாம். மேலும் ஆற்றில் குளிப்பதையும், துணி துவைப்பதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அணையில் இருந்து நீர் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts