கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை குடியிருப்பு பகுதிகளுக்கு வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக வந்து செல்வதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனும் உயிர் பயத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சோலையார் டேம் குடியிருப்பு பகுதிக்குள் வந்த யானைகள் மக்களுக்கு உயிர் பயத்தை காட்டி சென்றுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்;
நேற்று இரவு சோலையார் டேம் இடது கரை பகுதியில் நகராட்சி மூலம் குடிநீர் வழங்கும் இடத்தை யானைகள் சேதப்படுத்தியது. அப்பொழுது நாங்கள் வனத்துறை அறிவிப்பின்படி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தோம் அருகில் உள்ள குடிநீர் வழங்கும் இடத்தை சேதப்படுத்தியது. இதே போல் நாங்கள் குடியிருக்கும் இடத்தையும் சேதப்படுத்தும் பொழுது எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறோம். எனவே மத்திய மாநில அரசே நிரந்தரமாக எங்கள் உயிருக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில்; அடித்தட்டு சாமானிய மக்களுக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் ஆசையான வார்த்தைகளை பேசி பணமும், பரிசுப் பொருட்களும் கொடுத்து எங்களை ஏமாற்றி விடுகிறார்கள். நாங்கள் சிரமப்படும் போது எங்களுக்கு உதவி செய்வது போல் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து, எங்களை விட்டால் சாமானிய மக்களை பாதுகாப்பதுக்கு யாரும் இல்லை என்று விளம்பரத்தை தேடுகிறார்கள்.
ஆனால் நாங்கள் எத்தனையோ முறை அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். வனவிலங்குகள் விரும்பி உண்ணும் பயிர்கள் அடர்ந்த வனப்பகுதியில் பயிரிடலாம் என்கிறார்கள். இதை அரசு தாராளமாக செய்து கொடுக்கலாம். நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வனவிலங்கு வராமல் எங்களையும் பாதுகாத்துக் கொடுக்கலாம் என்று வேதனையோடு தெரிவித்தனர்.
நாமும் மத்திய மாநில அரசுகளுக்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் மக்களோடு மக்களாக நின்று மேற்கண்ட கோரிக்கையை வைக்கின்றோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வால்பாறை P.பரமசிவம்.