பாரதியார் பிறந்த இல்லத்தை சீரமைக்கக் கோரி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் மழையினால் சேதமடைந்த மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தை சீரமைக்காமல் மூன்று மாதங்களுக்கு மேலாக காலம் தாழ்த்திய தமிழக அரசை கண்டித்து பாரதியார் பிறந்த இல்லத்தை விரைவில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும் பாரதியார் பிறந்த இல்லம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதிமுக எட்டையாபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டின் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜ் தலைமை வகித்தார் கண்டனம் உரையாற்றினார் தொடர்ந்து சேதமடைந்த பாரதியார் பிறந்த இல்லத்தையும் பார்வையிட்டார் இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன் சின்னப்பன் ஒன்றிய செயலாளர் போட்டுசாமி பால்ராஜ் விளாத்திகுளம் முன்னாள் சேர்மம் முனியசக்தி ராமச்சந்திரன் அதிமுக விளாத்திகுளம் வார்டு மெம்பர் பிரியா மகளிர் அணி சாந்தி செல்வி மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என கலந்து கொண்டனர்,

இதனைத் தொடர்ந்து முன்னாள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திரம் போராட்ட வீரர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் இசை மா மேதைகள் பிறந்த மண்ணில் அத்தனை தலைவருக்கும் மணிமண்டபங்கள் அமைத்து அரசு விழா அறிவித்து பெருமை சேர்த்த ஆட்சி அதிமுக ஆட்சி தான் மற்றும் அதிமுக ஆட்சியில் பல பணிகள் தொடங்கி செய்து முடிக்கப்பட்டது . ஆனால் இந்த பாரதியார் பிறந்த வீட்டை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று கண்டனம் உரையாற்றினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts