ஆழியாறு அணை ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு இரண்டாம் கட்டம் மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் ஆழியார் அணை உள்ளது. அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய, புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும்  பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு முக்கிய அணையாக திகழ்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அணையின் நீர்த்தேக்க முழு கொள்ளளவு 3864 மில்லியன் கன அடியாகும். மொத்தம் 120 அடி உயரம் கொண்டதாகும்.

கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக கடந்த 28 ஆம் தேதி அன்று அணையின் நீர்மட்டம் 110 அடியானது  எனவே ஆழியாறு கரையோர பொது மக்களுக்கு முதற்கட்ட அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டது.

அதனை அடுத்து மேலும் கடந்த 5 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 7 மணி நிலவரப்படி 115.20 அடியானது. அணைக்கு விநாடிக்கு 728 கன அடி நீர்வரத்து இருப்பதால், அணையில் இருந்து 176 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழு கொள்ளளவை அடைய இன்னும் ஐந்து அடியே உள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை மூலமாக ஆழியார் ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆழியாறு, மயிலாடுதுறை, ரமணமுதலிபுதூர், ஆனைமலை, ஆத்துப்பொள்ளாச்சி, காளியப்ப கவுண்டன்புதூர், பூச்சனாரி, ஆலங்கடவு, மனக்கடவு மற்றும் கேரளா முத்துசாமிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர கிராம மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கரையோர மக்கள் அணைப்பகுதியை ஒட்டி ஆடு, மாடு மேய்ச்சலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts