ஆழியார் கவியருவி திறப்பு… சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் வனப்பகுதியில் கவியருவி உள்ளது முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்து கவியருவில் குளித்து மகிழ்ச்சி அடைவார்கள்.

இந்நிலையில் கடந்த வாரங்களில் வால்பாறை பகுதிகளில் கனமழை காரணமாக ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

இந்நிலையில் கவியருவி நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்படும் என வனத்துறை அறிவித்திருந்த நிலையில் இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts