தவறான பாதையில் வாகனங்கள் ஓட்டுவது அதிகரிப்பு!!கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!

கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் தவறான திசைகளில் வருவது ஒருவழிப்பாதை போன்ற பாதைகளில் விதிகளை மீறி செல்வது போன்ற செயல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபடுவதினால் வாகன விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நேரத்தை மிச்சப்படுத்தவும், U-டர்ன் எடுப்பதை தவிர்க்கவும் பல வாகன ஓட்டிகள் இப்படி செய்வதாக போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நஞ்சப்பா சாலை, மேட்டுப்பாளையம் சாலை (கவுண்டம்பாளையம் அருகில்), தடாகம் சாலை (இடையார்பாளையம் சந்திப்பில்), அவிநாசி சாலை (உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகில்) போன்ற இடங்களில் இது அதிகமாக நடக்கிறது.
அதே போன்று கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் அனேக இடங்களில் இது போன்ற தவறுகள் நடந்து கொண்டு இருக்கிறது.

கடந்த எட்டு மாதங்களில், தவறான பாதையில் வாகனம் ஓட்டியதால் பல்வேறு விபத்துகள் நடந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனவே, பொது மக்கள் தவறான பாதையில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

கோயம்புத்தூர் நகரத்தில் பல இடங்களில் வாகன ஓட்டிகள் தவறான பாதையில் செல்வதால் விபத்துகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. போக்குவரத்து காவல்துறையினர் இதை தடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனாலும், பலர் தொடர்ந்து இப்படி செய்கிறார்கள்.

இது தொடர்பாக போக்குவரத்து துணை ஆணையர் S. அசோக் குமார் கூறுகையில், “தவறான பாதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பாதசாரிகள் மற்றும் மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள்” என்றார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஈச்சனாரி பாலத்தின் கீழ் தவறான பாதையில் வந்த இரு சக்கர வாகனம் ஒரு மரண விபத்துக்கு காரணமானது.
மேலும் அவர், “தூரத்தை குறைக்க நினைத்து தவறான பாதையில் செல்கிறார்கள். இரவு நேரங்களில் இது அதிகமாக நடக்கிறது. அப்போது வாகனங்கள் வேகமாக வரும். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. கொஞ்சம் தூரம் சுற்றி சென்றாலும் தவறான பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும். எல்லா சாலைகளிலும் போக்குவரத்து காவலர்களை நியமிக்க முடியாது” என்றார். முதல் முறை தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறையின் கோட்டப் பொறியாளர் G. மனுநீதி கூறுகையில், “போக்குவரத்து விதிமீறல்களை கண்டறியும் நவீன கேமராக்கள் வந்துள்ளன. தவறான பாதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, முக்கிய சாலைகளில் இந்த கேமராக்களை பொருத்த வேண்டும். விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மட்டும் போதாது. கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் பலன் கிடைக்கும்” என்று அவர் கூறினார்.

பொதுமக்கள் கொஞ்சம் தூரம் அதிகமாக சென்றாலும் பரவாயில்லை. ஆனால், தவறான பாதையில் சென்று விபத்துகளை ஏற்படுத்த வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கேமராக்களை பயன்படுத்தி தவறான பாதையில் செல்பவர்களை கண்காணிக்க வேண்டும். அபராதம் விதிப்பதன் மூலம் தவறான பாதையில் வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க முடியும். பல்வேறு இடங்களில் தானியங்கி கேமரா மூலம் அபராதம் போன்றவை விதிக்கப்பட்டால் இது போன்ற தவறுகளை சிறிதளவானது தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts