பொள்ளாச்சி- வால்பாறை பேருந்து என்ன ஆச்சு..?

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு காலை 4 மணி முதல் 9 மணி வரை ஏழுக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

ஆனால், இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. 5 பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வரவில்லை.

இதனால், வாக்களிக்க வால்பாறை செல்ல பொள்ளாச்சியில் காத்திருந்த பயணிகள் மற்றும் வழக்கமாக வால்பாறை செல்லும் பயணிகள் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன். பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp