விமான நிலையத்தில் இரு வேறு கட்சியினர் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு!!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்துதிருந்தார்.

இருவரும் கோவைக்கு விமான நிலையம் வந்த நிலையில் அவர்களை வரவேற்க இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

முதலில் வெளிவந்த தொல். திருமாவளவனை விசிக தொண்டர்கள் அழைத்துச் சென்ற பொழுது எழுச்சி செம்மல் திருமா வாழ்க என்ற கோஷங்களை எழுப்பினர்.அப்போத விமான நிலையத்தில் இருந்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்கும் விதமாக பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜெய்பீம் என்ற முழக்கங்களை எழுப்பினர் பாஜகவினரும் பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை எழுப்பினர்.

இரு கட்சியினரும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பிக் கொண்டால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது!!

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp