ஒடிசாவில் இருந்து கருப்பு நிற தாது மணல் ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரிக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. ஒடிசாவை சேர்ந்த ஜாமிர்(வயது 29) என்பவர் அந்த லாரியை ஓட்டி வந்துள்ளார். மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புழுதிபட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர். இருவரும் லேசான காயமடைந்த நிலையில் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து புழுதிபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.