வருமானவரி துறை அறிவிப்பு..! இன்றே கடைசி நாள்.
ஆதார்கார்டு உடன் பான்கார்டு இணைக்காவிட்டால் நாளை முதல் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆதார்கார்டு உடன் பான்கார்டை இணைக்க அவகாசம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது அபராதத்துடன் இணைக்கப்பட்டு வருகிறது.
ஜூலை 1 முதல் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கும் நபர்களுக்கு இரு மடங்கு அபராதமாக ரூ. 1000 அபராதம் செலுத்தவேண்டும். ஆகையால் இரு மடங்கு அபராதத்தை தவிர்பதற்க்காக இன்று ஆதார் உடன் பான் கார்டு இணைத்துவிட அனைத்து மக்களுக்கும், வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-செய்யத் காதர்,குறிச்சி.