தூத்துக்குடி மாவட்டம் கேம்ப்லாபாத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பெண்மணி பாத்திமா. இவருக்கு கணவர் இல்லை. கணவர் இறந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள் யாஸ்மின் ஹுமைரா, பி.காம் படித்து வருகிறார். மூன்றாவது பெண் 6வது படித்து வருகிறாள். இரண்டாவது பெண் ருமானா காயல்பட்டினம் எல் கே பள்ளியில் 12வது பொதுதேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாள்.
பொருளாதார வசதி கொண்ட நன்கு படித்த பெற்றோர்களை கொண்ட பிள்ளைகள் படிப்பில் சாதனை படைப்பது சாதாரன விஷயம். தந்தை இல்லாத உடல் நலம் குன்றிய தாயார் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உறவுகள் ஆதரவு இல்லாத நிலையில், காயல்பட்டினம் எல் கே பள்ளியில் 12வது தேர்வில் பள்ளியில் முதலிடம் வகித்த மாணவி சதோதரி ருமானா அவர்கள் இந்த மானவிக்கு பக்கபலமாக இருப்பது ஊக்கமூட்டுவது பாராட்டுவது உயர்கல்விக்கு வழிகாட்டுவது விருதுகள் கொடுத்து கண்ணியப்படுத்துவது கல்வி அறிவு உள்ளவர்கள் மீது கடமை. சகோதரி ருமானா அவர்கள் கூறும்போது எனது கல்விக்கு உதவிய அனைத்து சகோதரர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்தார்
நாளைய வரலாறு செய்திக்காக,
-அன்சாரி, நெல்லை.
One Response
தூத்துக்குடி மாவட்டம்-காயல்பட்டிணம் இரயில் நிலையத்தின் நடைமேடை(Platform)உயரம் மிகவும் குறைவாய் உள்ளதினால்,பயணியர்கள் இரயில் பெட்டிகளில் ஏற இறங்க மிகவும் சிரமம்
படுவதினாலும்,சில சமயங்களில் விபத்துக்கும் ஆளாகி விடுவதினாலும்,இந்த பெரும் குறையை
போக்கிட வேண்டி,அவசியம் நடைமேடையை உயர்த்திட இரயில்வே துறை ஆவன செய்ய வேண்டும். நன்றி.