வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயிலில் :
ஜூன் எட்டாம் தேதி முதல் ஜூன் 13ஆம் தேதி வரை கூடுதலாக இரு பொதுபெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோல திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும் பாலக்காடு விரைவு ரயிலில், ஜூன் 7 தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரைகூடுதலாக இரு பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளையவரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.