அரசு மாணவர் விடுதியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி கோரிக்கை மனு!!

கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் கோட்டூர் திருவள்ளுவர் காலணியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அரசு மாணவர் விடுதி தொலைதூர கிராம மாணவர்களும் மலை கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினு மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர்.

தற்பொழுது மிகவும் சேதம் அடைந்து புதர் மண்டி காணப்படுகிறது. விஷ பூச்சிகள் உலா வருகின்றன.

அதனை சீரமைத்து மாணவர் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி பிரெட்டர் நிட்டி மாணவர் இளைஞர் இயக்கம் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேற்று(1.8.2022) திங்கட்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp