கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலகு-1
மாணவர்களும், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பேரவையும், இணைந்து
கல்லூரி முதல்வர் முனைவர்.ரெ.முத்துக்குமரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பொள்ளாச்சி ரயில் நிலைய சந்திப்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுமார் 40 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவியர்கள் 50 கிலோ நெகிழிக் கழிவுகளையும், இதரக்கழிவுகளையும் அகற்றினர்.
தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவைத்தலைவர் வெள்ளை நடராஜ் நெகிழிக்கழிவுகளினால் ஏற்படும் ஆபத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிலைய அதிகாரி அச்சித்தாபிஸ்வான் அவர்கள் தூய்மையின் பயன்களை எடுத்துரைத்தார்.
என்.ஜி.எம் கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட அலகு 1 ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெ.சோமசுந்தரம் அவர்கள் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வானது மக்களுக்கு தூய்மையின் விழிப்புணர்வை எடுத்துரைப்பதாக அமைந்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
One Response
India has cleaned the inda 🔥