நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் தாஜூல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் ஹனபி சார்பாக நடைபெற்ற மீலாது விழா ஊர்வலத்தில் சிறுவர்,சிறுமியர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்…

இஸ்லாமியர்களின் இறை துாதரான நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா மீலாது நபி விழாவாக அனைத்து பகுதியிலும் கொண்டாடப்படுகிறது..இந்நிலையில் கோவை குணியமுத்தூர் பகுதியில் தாஜூல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் ஹனபி சார்பாக நபிகள் நாயகம் உதய தின விழா மற்றும் மத நல்லிணக்க விழா நடைபெற்றது…குணியமுத்தூர் பெரிய பள்ளி வாசல் முன்பாக நடைபெற்ற விழா துவக்க நிகழ்ச்சியில், , தாஜூல் இஸ்லாம் சுன்னத் பள்ளி வாசல் தலைவர் முகம்மது இப்ராஹீம் தலைமை வகித்தார். Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ செயலாளர் அப்துல் ரஹ்மான் வரவேற்புரை ஆற்றினார்.முத்தவல்லி ஹாஜி அக்பர் அலி,மற்றும் நிர்வாகிகள் காஜா முகம்மது,அசனார்,பாரூக்,அப்துல் ஹக்கீம்,ரபீக்,சம்சுதீன்,சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru
மத நல்லிணக்க விழாவாக நடைபெற்ற இதில் மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார்,பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்..புத்தாடை அணிந்த சிறுவர், சிறுமியர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். சிறுவர்கள் தங்கள் கைகளில் மத நல்லிணக்கம், உலக அமைதி ஆகியவற்றை வலியுறுத்தும் வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வல நிறைவில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp