கோவை : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்ததான முகாமில் 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
கோவை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது. கோவை மாநகர மாவட்ட தலைவர் அஜ்மல் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட செயலாளர் சைஃபுதீன் மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.