செங்கல்பட்டில் தனியார் மருத்துவ மாணவ மாணவிகள் பிரியாணை உண்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவ மாணவிகள் 28 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் செட்டிநாடு மருத்துவமனையில் நேற்று நண்பகல் அனுமதிக்கப்பட்டனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மருத்துவ கல்லூரியின் விடுதியில் மதியம் பிரியாணி உண்ட பின்பு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் 28 மருத்துவ மாணவ மாணவிகள் மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் விடுதியில் பிரியாணி சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-ருக்மாங்கதன், வட சென்னை.