குருநானக் கல்லூரி இருந்து ஆலந்தூர் மெட்ரோ வரை இன்று முதல் சிற்றுந்து சேவை தொடக்கம்!!

குருநானக் கல்லூரி

குருநானக் கல்லூரியிலிருந்து ஆலந்தூர் மெட்ரோ வரை 14/12/2022 முதல் சிற்றுந்து சேவை தொடக்கம்!!

மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்றுவருவதற்காக இணைப்பு சேவைகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன்படி ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை இன்று (14-ம் தேதி) முதல் 2 இணைப்பு சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன. இப்பேருந்து சேவை திங்கள் முதல் வெள்ளி வரை ஆலந்தூரில் இருந்து காலை 5.25 மணி முதல் இரவு 8.57 மணி வரையிலும், குருநானக் கல்லூரியில் இருந்து காலை 5.55 மணி முதல் இரவு 9.29மணி வரையில் 35 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இப்பேருந்தில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணம் ரூ.7 மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ருக்மாங்கதன் வ.
வட சென்னை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp