துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு!

துபாய்

கோழிக்கோட்டிலிருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் பி-737 விமானம் திட்டமிட்டபடி புறப்பட்டு துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, விமானத்தில் பாம்பு இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். சிறிது நேரத்தில், துபாய் விமான நிலையத்தின் தீயணைப்புத்துறை விமானம் முழுவதும் முறையாக புகையடித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது.

அதன் பின்பு அந்த விமானம் மறுமார்க்கமாக துபாயிலிருந்து கோழிக்கோடு வருவதற்கு 7 மணிநேரம் தாமதமானது. இதையடுத்து அந்த விமானத்தில் பயணிக்க வேண்டிய பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு வருந்துவதாக ட்விட்டரில் பதிவிட்ட ஏர் இந்தியா, பயணிகள் அனைவரையும் தங்கும் விடுதிகளுக்கு அனுப்பி வைத்தது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

– பாரூக்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp