பிராணவாயுவை உற்பத்தி செய்யும் செடிகளை வளர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கோவை பெண்மணி!!

பிராணவாயுவை உற்பத்தி செய்யும் செடிகளை வளர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கோவை பெண்மணி!!

கோவை: வீடுகளுக்குள் அதிக அளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் செடிகளை வளர்க்கும் விழிப்புணர்வை கோவையை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஏற்படுத்தி வருகிறார்.

மக்கள் தொகை பெருக்கத்தால் நகரமயமாக்கல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சாலை விரிவாக்கம், குடியிருப்புகள் போன்ற பல்வேறு தேவைகளுக்காக அதிக அளவிலான மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிறது. இதனால் பிராணவாயு என்பது குறைந்து கொண்டே வரக்கூடிய சூழ்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய தாவரங்களை வளர்க்கும் விதமான முயற்சிகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கோவையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர். இதனை உணர்த்தும் விதமாக கோவையில் வீட்டிற்குள் வளர்க்கக்கூடிய பிராணவாயுவை அதிகம் உற்பத்தி செய்யக்கூடிய செடிகள் கண்காட்சி வைத்துள்ளார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

வீடு மற்றும் அலுவலகங்களில் அழகிற்காகவும், மன அமைதியை ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்படும் இந்த செடிகள் அதிக அளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் என்கிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

– சீனி,போத்தனூர்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp