கோவை ஆட்சியர் அதிரடி!! துணிவு வாரிசு திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி!!
கோவையில் பொங்கல் பண்டிகையையொட்டி அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களை அதிகாலை 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டன.
அனுமதி இன்றி சிறப்பு காட்சி திரையிட்ட கோவை கே.ஜி, சாந்தி, கற்பகம் காம்ப்ளக்ஸ், வேல் முருகன், அர்ச்சனா, தர்ச்சனா, அரசன், செந்தில் குமரன் உள்ளிட்ட 8 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு கோவை ஆட்சியர் சமீரன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார், தமிழகத் துணைத் தலைமை நிருபர்,