தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார் சிட்டி திட்டத்தின் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.15கோடி மதிப்பீட்டில் 3 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட காமராஜர் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து காணப்பட்டன. இதனால் வாகனங்கள் குண்டும் குழியுமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் சாலை மேலும் பழுதடைய வாய்ப்புள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளை வரவழைத்து சாலைகளை ஆய்வு செய்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் காமராஜர் சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன் தூத்துக்குடி.