பட்ஜெட் 2023 எதிரொலி: தமிழக விவசாயிகள் போராட்டம்., கைது நடவடிக்கையில் இறங்கிய போலீஸ்!!

பட்ஜெட் 2023 எதிரொலி

பட்ஜெட் 2023 எதிரொலி

பட்ஜெட் 2023 எதிரொலி: தமிழக விவசாயிகள் போராட்டம்., கைது நடவடிக்கையில் இறங்கிய போலீஸ்!!

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழக விவசாய சங்கத்தினர், போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

மத்திய அரசின், இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆனால் இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான எந்த புதிய சலுகைகளும் வெளியாகவில்லை. அதாவது, விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை பற்றிய அறிவிப்பு வெளியிடாதது, விவசாய இடுபொருளான உர மானியத்திற்கு கடந்த ஆண்டை விட 50 ஆயிரம் கோடி குறைவாக ஒதுக்கீடு செய்தது, உணவு மானியத்தை குறைத்தது போன்ற செயல்களை கண்டித்து திருவாடானை பகுதியைச் சார்ந்த விவசாய சங்கத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற அவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சிவகுமார்  சிந்தாரிப்பேட்டை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp