பழனி சென்று வரும்போது பக்கத்து பயணியால் “மொட்டை” அடிக்கப்பட்ட சம்பவம்! அறிமுகம் இல்லா நபர்கள் கொடுக்கும் தின்பண்டர்களா பொதுமக்களே உஷார்!!
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் 42 வயதான சங்கரேஸ்வரி, இவர் கடந்த, 02ம்தேதி, இரவு 11 மணியளவில் பழனியில் இருந்து பேருந்தில் கோவைக்கு வந்துள்ளார். அவரது பக்கத்து இருக்கையில் இருந்த பெண் ஒருவர், சங்கரேஸ்வரிக்கு சாப்பிட சில தின்பண்டங்களை கொடுத்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சங்கரேஸ்வரி அதை சாப்பிட்டுவிட்டு சற்று நேரத்தில் நன்றாக தூங்கியுள்ளார். பேருந்து கோவை உக்கடம் வந்த பொழுது பேருந்தில் இருந்து இறங்கிய சங்கரேஸ்வரி தனது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவரது மூன்றரை சவரண் தங்கச் சங்கிலி மற்றும் கைப்பையை காணாமல் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து பேருந்தில் இவருக்கு தின்பண்டங்களை வழங்கிய பெண் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.