ரூ.1000 கோடி மதிப்பில்,சர்வதேச பர்னிச்சர் பூங்கா அமைக்கும் பணிகளை திருமதி கனிமொழி எம்பி பார்வையிட்டனர்!!
தூத்துக்குடியில் ரூ.1000 கோடி மதிப்பில்,சர்வதேச பர்னிச்சர் பூங்கா அமைக்கும் பணிகளை திருமதி கனிமொழி எம்பி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மேயர் அவர்கள் பார்வையிட்டனர்.
தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சிப்காட் வளாகத்தில் ரூ.1000 கோடி மதிப்பில், 1150 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் இந்தியாவின் முதல் சர்வதேச பர்னிச்சர் பூங்காவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில், அங்கு நடைபெற்று வரும் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, மடத்தூர் பகுதியில் புதிதாக அமைய இருக்கும் ESIC மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்ததையொட்டி அதனை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முத்தரசு கோபி ஶ்ரீவைகுண்டம் .