ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசியின் அறிமுகம்!!

ரேஷன்

தமிழக ரேஷன் கடையில் கிடைக்கும் ரேஷன் அரிசிக்கு கேரளாவில் அதிக விலை கிடைப்பதால்
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கதையாக தொடர்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் 80% குறைந்துள்ளது என்றாலும் காவல்துறையின் கண்களை கட்டி விட்டு 20% ரேஷன் அரிசி கடத்தல் இரவு நேரங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் போலீசாரை எளிதாக தொடர்பு கொண்டு கடத்தல் பற்றி புகார்
தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக கேரளா எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் ரயில்வே கேட் சோதனைச்சாவடியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் உத்தரவின்படி ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது அதன் ஒரு பகுதியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் போலீசாரை எளிதாக தொடர்பு கொள்ள தொலைபேசி எண் 1800 599 5950 வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp