NALAIYA VARALARU
வால்பாறை பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையின் அவல நிலை!!
கோவை மாவட்டம் வால்பாறை பழைய பேருந்து நிலையம் வளாகத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் விதமாக ‘தாய்மார்கள் பாலூட்டும் அறை’ என்று ஒன்று ஏற்படுத்தப்பட்டது. பேருந்து பயணத்திற்காக பேருந்து நிலையம் வரும் தாய்மார்கள் பேருந்து வர காலதாமதம் ஏற்பட்டால் இந்த அறைகளுக்கு சென்று தங்களது குழந்தைகளின் பசியை ஆற்றி வந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆனால் தற்போது இந்த தாய்மார்கள் பாலூட்டும் அரையானது பராமரிப்பு இல்லாமல் காணப்படுவதினால் மது பிரியர்கள் அப்பகுதியில் சென்று மது அருந்தும் இடமாக மாறி வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் பாலூட்டி மையத்தை சரி செய்து தாய்மார்களுக்கு தருவதற்கான நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மதுபானம் அருந்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.