NALAIYA VARALARU
கோவில்பட்டியில் கொட்டும் மழையில் மே தின பொதுக்கூட்டம்!!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மே தின பொதுக் கூட்டம் நேற்று மாலை கொட்டும் மழையில் அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கினங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிற்சங்கம் சார்பாக மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.G.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் M.G.R திடலில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் :
பல போராட்டங்களுக்கு பின் 8 மணி நேர வேலை என்ற உரிமையை மே தினத்தில் நிலை நாட்டியது. தி.மு.க அரசு 12 மணி நேரம் வேலை என அறித்தது. இதை திமுக கூட்டனி கட்சிகள் எதிர்க்காமல் மவுனமாக இருந்தது. இதற்கு சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.
NALAIYA VARALARU
ஸ்டாலினுக்கும், தி.மு.க.,விற்கும் மே தினம் கொண்டாட உரிமை இல்லை. உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். அதிமுக மக்களுக்காகப் பாடுபடும் இயக்கம். திமுகவுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த மாபெரும் மே தின பொதுக்கூட்டத்தில் தலைமை கழக அறிவிப்பின் படி கழக தலைமை நிர்வாகிகள் திரு.K.T .பச்சைமால் கழக அமைப்பு செயலாளர்., திருமதி.குமுதா பெருமாள் தலைமை கழக பேச்சாளர் ., மற்றும் கழக அமைப்பு செயலாளர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ,கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர் மாண்புமிகு கடம்பூர்.செ.இராஜூ அவர்கள் கலந்து கொண்டு பொதுக்கூட்ட சிறப்புரையாற்றினார்கள்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ,ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் உயர்திரு.P.மோகன் B.Sc., Ex.MLA அவர்கள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.