பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கருப்பசாமி கோவில் திருவிழா நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. நான்கு நாட்கள் விழா நடைபெற்று வருகிறது. பாஞ்சாலங்குறிச்சி அருள் மிகு கோட்டை கருப்பசாமி கருப்பசாமி கோவில் கொடை விழா 18.05.2023 அன்று காலை 9 மணிக்கு நாள் கால் நட்டி தொடங்கியது.

மேலசுப்பிரமணியபுரம் கணக்கு தணிக்கை அதிகாரி அதிகாரி திரு.செ.ஜெயகுமார் செல்லையா அவர்கள் கவர்னகிரி ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கோவில்பிள்ளை அவர்கள் முன்னிலையில் விழா இனிதே நடைபெற்றது.

19.05.2023 வெள்ளிக்கிழமை காலை அகில இந்திய சுந்தரலிங்கம் தேவேந்திரனார் பேரவை தலைவர் திரு L.K.முருகன் அவர்கள் தலைமையில் புன்னிய தீர்த்தம் எடுத்துவந்து கோட்டை கருப்பசாமிக்கு கும்பம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து வடக்கு ஆவரங்காடு ஊர் நாட்டமை திரு. முருகன் அவர்கள் சாமிக்கு பூசைகள் செய்து வெகு சிறப்பாக மதிய கொடை நடைபெற்றது.

19.05.2023 இரவு 8 மணிக்கு ஊர் அழைப்புடன் சாமக்கொடை துவங்கியது. பெறும் மக்கள் கூட்டத்தின் இடையில் கோட்டை கருப்பசாமி கோவிலின் கொடை விழா ஆசிரியர் திரு. குணசேகரன் முன்னிலையில் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர் பேரவை நிறுவனர் Lgra. சு.பரமசிவன் தலைமையில் கவர்னகிரி திரு. பொன்ராசுக்கு முதல் மரியாதையுடன் துவங்கியது. சாமக்கொடை சுமார் 15,00 க்கு மேற்பட்ட பேர் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்று. பொது மக்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

20.05.2023 கிடாய் பலியிடுதல் நடைபெற்றது பின்னர் பால்குடம் காணிக்கை செலுத்துதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மள்ளர் சாமிநாதன், வழக்கறிஞர் முத்துசாமி , பாஜக மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் ஹேம மாலினி , வன்னியராஜ், குபேந்திசொக்கநாதபுரம்தங்கசாமி ராமையா வேளாண்மை விஞ்ஞானி ,சண்முகவேல் சங்கம் பட்டி , சங்கர பாண்டியன் வீரபாண்டி, தங்க பாண்டி சொக்கநாதபுரம் கவர்னர்கிரி
ஆவரங்காடு, தெற்கு ஆவரங்காடு , சாமிந்த்தம், புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், குருக்கசாலை , கோவில்பட்டி , ஒட்டந்த்தம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts