மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது பெண் புகார்!! சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை!!!

கோவை மாவட்டம் கணபதி அருகே உள்ள லட்சுமி கார்டனை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி, 32 வயதான, புவனேஸ்வரி இவர், ஐ. டி. ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு கடந்த, சில நாட்களுக்கு முன்னர், ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் பகுதிநேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து புவனேஸ்வரி, அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து டெலிகிராம் குழுவில் இணைந்துள்ளார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், கூகுள் மேப் குறித்து ரிவ்யூ செய்தால், அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.

மேலும் அவர் பிட்காயின் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனவும் கூறினார். இதனை உண்மை என நம்பிய புவனேஸ்வரி, முதற்கட்டமாக அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் பணம் செலுத்தினார். இதனை அடுத்து அவருக்கு லாபத்துடன் சேர்த்து, 2800 பணம் கிடைத்தது. மேலும் ஆன்லைன் மூலமாக அவர்கள் அனுப்பிய பணிகளை, தொடர்ந்து செய்து கொடுத்து வந்துள்ளார். அப்போது அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் வெவ்வேறு காலகட்டங்களில் 8லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்.

ஆனால் அவர் கூறியபடி, லாபத் தொகை கிடைக்கவில்லை, தான் கட்டிய பணத்தை திரும்ப பெற முற்பட்ட பொழுது அந்த பணமும் வரவில்லை, மர்ம நபர் தன்னை மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து புவனேஸ்வரி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில், நேற்று புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp