ஆசைக்கு இணங்காவிட்டால் ஊரைவிட்டு துரத்துவேன்: பெண்ணை டார்ச்சர் செய்த ஆய்வாளர் அதிரடியாக பணியிடை நீக்கம்!
திருச்சி காவல் ஆய்வாளர் ஒருவர், தன்னிடம் பாலியல் ரீதியாக பேசியதாகவும், தன்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அந்த காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி காட்டியுள்ளார் மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கிரிஜா. இவர் தற்போது திருச்சி பாலக்கரை கிருஷ்ணன்கோவில் தெரு அருகே தனியாக வசித்து வருகிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் கிரிஜா, கல்லூரி மாணவர்களுக்கு தனியாக பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் புகார் ஒன்று தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்றதாகவும், அங்கு பணியிலிருந்த காவல் ஆய்வாளர் சுகுமார் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து தன்னுடைய கைபேசி எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்பி பேசி வந்ததாகவும், ஆன்லைன் மூலம் காவல் துறைக்கு புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் தன்னை சிலர் மிரட்டுவதாகவும், தன்னிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அவர் மனு அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனது மாமன் மகன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர், எனது செல்போனை அந்த காவல் நிலைய அதிகாரியான சுகுமார் வாங்கி வைத்துக்கொண்டார். என்னைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டு எனக்கு உதவுவது போல நடித்த காவல் ஆய்வாளர் சுகுமார் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். வீடியோ கால் மற்றும் வாய்ஸ் காலில் வந்து தொல்லை கொடுத்தார்.
அவரது ஆசைக்கு இணங்காவிட்டால் என்னை ஊரை விட்டு துரத்துவேன் எனக்கூறினார். என்னை தாக்கி தவறாக வீடியோவும் எடுத்துள்ளார். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னைப்போல் வேறு எந்த பெண்ணும் பாதிக்கக் கூடாது” என கிரிஜா தெரிவித்தார்.
இந்த புகார் மற்றும் கிரிஜாவின் பேட்டி, அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியான நிலையில் மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து, காவல் ஆய்வாளர் சுகுமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
– ராயல் ஹமீது.