ஆன்லைனில் நூதன முறையில் பணத்தை சுருட்டிய மூவர் கைது!!
காவல்துறையினர் நடவடிக்கை!!!
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அக்கம்மாள் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் 48 வயதான ரமேஷ். இவரது மனைவி ஹேமா என்கிற 38 வயதான ஹேமலதா. இவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளனர். அதில் கோவையில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை பதிவு செய்து வந்ததாக தெரிகிறது. இவர்களது சேனலில் தென்காசியை சேர்ந்த 34 வயதான அருணாச்சலம் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தம்பதியினர் தங்களது யூடியூப் சேனலில் ரூ. 1, 200 முதலீடு செய்தால் 20 நாட்களில் மூலதன தொகையுடன் ரூ. 300 சேர்த்து ரூ. 1, 500 ஆக திருப்பி தரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை நம்பிய பலர் இவர்கள் கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் அறிவித்தப்படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க வில்லை.
இதனிடையே தம்பதியினர் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சேனலில் முதலீடு செய்த கோவை பன்னிமடை பாரதி நகரை சேர்ந்த 30 வயது ரமா, கோவை மாநகர சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் ரேணுகா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
விசாரணையில் தம்பதியினர் 44 பேரிடம் ரூ. 41 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த ரமேஷ், அவரது மனைவி ஹேமலதா மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அமைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.