இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவியை கீழே தள்ளி நகை பறிக்க முயற்சி!! காவல்துறையினர் தீவிர விசாரணை!!!

இருசக்கர வாகனத்தில்

இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவியை கீழே தள்ளி நகை பறிக்க முயற்சி!! காவல்துறையினர் தீவிர விசாரணை!!!

கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள செந்தில் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஒரு விசைதறி தொழிலாளி. இவரது மனைவி 45 வயதான ராஜலட்சுமி.

சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து, அங்கு சிகிச்சை முடிந்ததும் கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் மீண்டும் வீட்டுக்கு திரும்பியதாக தெரிகிறது.

மொபட் கோவை- அவினாசி ரோட்டில் கருமத்தம்பட்டி அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். ‌

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவர்கள் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றனர். அப்போது அவரது முடியை பிடித்து மர்மநபர்கள் இழுத்தனர். இதில் கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனை பார்த்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

மொபட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த கணவன் -மனைவி இருவரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சியில் அவரின் முடியை பிடித்து கீழே தள்ளிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp