ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சீதாராம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணராவ். இவர் கோவை சரவணம்பட்டி ஸ்ரீநகரில் தங்கியிருந்து, அந்த பகுதியில் வேலை பார்த்து வருகிறார். பள்ளி விடுமுறை காரணமாக லட்சுமணராவின் மனைவி மற்றும் மகன்
ஆகியோர் ஆந்திராவில் இருந்து கோவைக்கு வந்து லட்சுமணராவுடன் தங்கியிருந்தனர்.
சம்பவத்தன்று லட்சுமணராவின் மகன் செல்போனில் பேசிக்கொண்டு அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிறுவனிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர். அப்போது அந்த சிறுவன் செல்போனை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுவனின் குத்திவிட்டு செல்போனை பறித்து சென்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.