தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கொடியன்குளம் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடியங்குளம் ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி மற்றும் கொடியங்குளம் ஊராட்சியில் மேட்டூரில் 6 லட்சம் மதிப்பீட்டில் 10ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ராமராஜ் அவர்கள், பணி மேற்பார்வையாளர் திரு.சங்கர் அவர்கள், கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் அவர்கள் ,துணை தலைவர் கௌதம் ஊராட்சி மன்ற செயலர் ஜெயசிங், கொடியங்குளம் கிளை செயலாளர் ராஜ் ,இளைஞரணி விக்னேஷ் கொடியங்குளம் , அமல்ராஜ் பாக்கியநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.