கோவை புரூக்பீல்டு வணிக வளாகத்தில் பொது மக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க மற்றும் பயன்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் பிரதாப் துவக்கி வைத்தார். கோவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கையை மீட்டெடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம்,மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக ஏற்படுத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் கோவை மாநகரில் பொதுமக்கள் தினமும் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ள புரூக் பீல்டு வணிக வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியை கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் துவக்கி வைத்து பார்வையிட்டார்…பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இதில்,அரசு சாரா தொண்டு நிறுவனம்,ஸ்மார்ட் சிட்டி மிஷன்,சிறுதுளி,டான்சிம்,ராக்,ஈஷா,கையில் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்பினர் அரங்குகள் அமைத்து பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க எந்த பொருட்களை தவிர்க்க வேண்டும் ,பயன்படுத்த பொருட்களை காட்சி படுத்தி இருந்தனர்.தூய்மையான பசுமையான கோவையை உருவாக்கவே இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.