ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் நான்கு பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு !! வேலூர் சரக டிஐஜி முத்துசாமி அவர்கள் பாராட்டு!!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்-திருவள்ளூர் சாலையில் உள்ள சில்வர்பேட்டை சோதனை சாவடியில் அரக்கோணம் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையை சேர்ந்த டேவிட் ஜிந்தா (வயது 48), அரக்கோணம் சுவால்பேட் டையை சேர்ந்த சோபன் (23) என்பது தெரியவந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் அவர்கள் ஓட்டி வந்த ஸ்கூட்டரில் சோதனை செய்ததில் 4 கிலோ கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சாவையும், ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவல்துறையினரின் அதிரடி சோதனையில் கஞ்சா வியாபாரிகள் பிடிபட்டனர்
இதுபோன்று தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட நான்கு பேர் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.