கோவை மாவட்டம் வால்பாறை அரசு சுகாதார மருத்துவமனை செல்லும் பாதையில் மது பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது மக்களின் கோரிக்கையை ஏற்று வால்பாறை நகராட்சி உட்பட்ட பத்தாவது வார்டு பகுதி அருகே உள்ள காந்தி சிலை பின்புறம் கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது.
மற்றும் எம் ஜி ஆர் நகர் பகுதியில் குடியிருந்து வரும் மக்கள் அப்பாதையில் வருகிறார்கள் மற்றும் வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் அப்பாதையில் நடந்து சென்று வருகிறார்கள் கூட்டுறவு வங்கி இடத்தில் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் பேருந்தில் இறங்கி வரும் பொதுமக்கள் அப்பகுதியில் சிறுநீர் கழித்து வருவதினால் அப்பகுதியில் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவ்வழியாக கல்லூரி மாணவிகள் அரசு மருத்துவ மனைக்குச் செல்லும் பொதுமக்கள் செவிலியர்கள் டாக்டர்கள் உள்ளிட்ட பல தரப்பான மக்கள் அப்பாதையில் நடந்து செல்லும் இடத்தில் குடி பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதினால்.
கோவை மாவட்ட கலெக்டர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் செவிலியர் செல்லும் மருத்துவமனை பாதையில் சிறுநீர் கழிக்கும் நபர்களிடம் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இரவு நேரத்தில் மது பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதினால் வால்பாறை காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
பெண் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் பாதை மற்றும் ஆசிரியர்கள் குடியிருப்பு அருகில் உள்ள பகுதியாக உள்ளது. அப்பகுதியில் பெண்கள் நடப்பதற்கு அச்சத்தில் இருப்பதினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வால்பாறை மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன் .