நெல்லை சிறை நிரப்பும் போராட்டம்!! அத்து மீறிய காவல்துறை!! “சிறைவாசிகளுக்காக சாவோம்” என மக்கள் ஆவேசம்!! கடும் கொந்தளிப்புடன் நடைபெற்ற கைது!!

20 ஆண்டுகளை கடந்த ஆயுள்சிறைவாசி-களை கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளின் முன்பு சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

முதல் போராட்டம் இன்று நெல்லை மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டை சிறைக்கு முன்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மாலை 5.30 க்கு நூற்றுக்கணக்கானோர் மேலப்பாளையம் சந்தை அருகே குழுமினர். பாளை சிறை நோக்கி அனைவரும் அணிவகுக்க தொடங்கிய போது காவல்துறை தொடக்கத்திலேயே தடுத்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சிறிது தூரம் சென்ற பிறகு கைது செய்யுங்கள் என்றபோது , முரட்டுத்தனமாக காவல்துறை செயல்பட தொடங்கியது. சமூகத்தை குற்றம் சாட்டி ஒரு அதிகாரி பேசியது சர்ச்சையாகி கூட்டத்தினர் ஆவேச குரல் எழுப்பினர். அப்போது காவல்துறையின் போக்கை பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பவானி – A வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்தார். மற்ற அமைப்புகளின் தலைவர்களும் காவல்துறை அணுகுமுறை சரியில்லையே என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர். அப்போது பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், பிற அமைப்புகள், கட்சிகளின் பிரதிநிதிகளும் மறியலில் அமர்ந்தனர்.

கூட்டம் ஆவேசமாக கண்டன குரல் எழுப்பியது. பேச்சுவார்ததை மூலம் சுமூகம் செய்யலாம் என்றதை ஏற்காமல் காவல்துறையின் இரண்டு அதிகாரிகள் தள்ளியதில் சிலர் காயமடைந்து வாகனங்களில் சரிந்தனர். அப்போது ‘செத்தாலும் சிறைவாசிகளின் விடுதலைக்காக சாவோம்’ என முழக்கங்கள் அதிர்ந்தது.

அதற்குள் காவல்துறையில் சிலர் வருத்தம் தெரிவித்து அமைதி படுத்தியதும், கூட்டம் கைதாகியது. நெல்லை காவல்துறையில் உள்ள இரண்டு காவல்துறை அதிகாரிகள் உள்நோக்கோடு நடந்து கொண்டதாக, பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பத்திரிக்கையாளர்களிடம் குற்றம்சாட்டினார்.

இதில் ஷேக் மெய்தீன் (பாமக ) பவானி A வேல்முருகன் ( பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம்) திண்டுக்கல் ஜமால் ( IMMK) வழக்கறிஞா ஆறுமுகராஜ் ( அகில பாரத விஸ்வகர்மா உறவுகள்) அம்ஜத்கான (INL) நடராஜன் ( விசிக) குலாம் மைதீன் ( தவாக) சகாபுதீன் ( முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம்) A.K. நெல்சன் ( புரட்சி பாரதம்) செல்வம் ( த கொ இ பே) தமிழரசன் ( தமிழ் புலிகள்) தோழர். கதிரவன் (திராவிடர் தமிழர் கட்சி) லெனின் கென்னடி (தமிழர் உரிமை மீட்பு கழகம்) உள்ளிட்ட கட்சிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கைதாகினர்.

அடுத்த துணைப்பொதுச செயலாளர் நாச்சிக்குளம். தாஜுதீன் தலைமையில் மஜகவின் முன்னணி நிர்வாகிகள் கைதாகினர். காவல்துறை கூட்டத்தை கைதாகாமல் கலைக்கும் வகையில் பதட்டத்தை ஏற்படுத்தியதை பலரும் கண்டித்தனர்.

( அடுத்த பதிவில் விரிவான செய்திகள் வெளியிடப்படும் )

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp