கோவை மாநகராட்சி 86வது வார்டை சார்ந்த கரும்பு கடை பகுதியில் உள்ள செல்லா ராவுத்தர் வீதி திப்பு நகர் சாரமேடு ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகளாலும் சாக்கடை கழிவுகளாலும் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது இது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாக உள்ளதால் விரைவில் சாக்கடை கழிவு அடைப்புகளை சரி செய்து பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
மேலும் இந்தப் பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளனர் எனவே பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த மர்ம காய்ச்சலை போக்க இந்த பகுதி சாக்கடை கால்வாய்களை சரியாக தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.