தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா கருங்குளம் ஒன்றியம் ஆலாந்தா பாஞ்சாயத்த உட்பட கிராமத்தில் பெரும்பாலும் விவசாயமே. இந்த விவசாய இடத்தில் கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த கல்குவாரி அமைப்பதற்கு ஆட்சேபனை இருப்பின் தகவல் தெரிவிக்கவும் படி கிராம நிர்வாக அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதான் அடிப்படையில் ஆலந்தா பஞ்சாயத்து உட்பட கிராமத்தில் தோட்டம் கிணறுகள் விவசாய நிலங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி ஊருக்கு அருகில் இந்த கல்குவாரி வருகிறது மேலும் சவாலாப்பேரி அரசு பள்ளிக்கு அருகில் உள்ளது மற்றும் வனவிலங்கு இந்த பகுதியில் அதிகமாக வாழ்கிறது.
இந்த கல்குவாரி அமைத்தால் விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய கிராமங்கள் வாழ்க்கை பாதிக்கும் மேலும் மக்கள் குடி இருக்க முடியாது கால்நடை வளர்ப்பு தடைபடும் சுற்றுச்சூழல் மாசுபாடு இது போன்ற பாதிப்பு ஏற்படும். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த கல்குவாரி அனுமதி வழங்க் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது ஒன்றிய தலைவர் S.நங்கமுத்து வழக்கறிஞர் R.பிரபு மாவட்ட செயலாளர் பிறமொழி பிரிவு மாவட்ட செயலாளர் A.தம்பான் ஆலந்தா கிராம கிளை பொறுப்பாளர்கள் ரவி பாலமுருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.