கோவை வெள்ளலூர் அருகே போதை மாத்திரைகள் விற்ற மூன்று பேர் கைது!!!

கோவை போத்தனூர் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் அருகே சிலர் போதை மாத்திரை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது, அங்கு சந்தேகம்படும் படி நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட போத்தனூர் கதிரவன் நகரை சேர்ந்த 57 வயதான ஜெய்லாபுதீன், போத்தனூர் அஸ்லாம் தெருவை சேர்ந்த 24 வயதான இஸ்மாயில், சுந்தராபுரத்தை சேர்ந்த 21 வயதான சரண் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவர்களிடம் இருந்து 59 போதை மாத்திரைகள் மற்றும் 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp