தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க தாலுகா பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது!!

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க தாலுகா பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் செந்தூர் ராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானராஜ் சிறப்புரையாற்றினார்.சங்கத்தின் வளர்ச்சி பற்றி நில எடுப்பு தாசில்தார் சேதுராமன் பேசினார். மாவட்ட துணை தலைவர் சுகுணா உட்பட தாலுகா அலுவலக பணியாளர்கள் நில எடுப்பு அலுவலகப் பணியாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கோட்டக் கலால் தாசில்தாராக பதவி உயர்வு பெற்ற சரவண பெருமாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கௌரவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் வட்டக்கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வட்டத்தலைவராக மாரிமுத்து, வட்டச் செயலாளராக ராஜ்,வட்ட துணைத்தலைவராக மலையாண்டி, வட்ட இணை செயலாளராக கோபாலகிருஷ்ணன்,வட்ட பொருளாளராக பாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினராக ராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க இணை செயலாளர் பாலமுருகன் செய்திருந்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

ஓட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts