தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமையிலும், ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த போராட்டத்தின் போது கட்டுமான தொழிலாளர்களை வஞ்சிக்கக்கூடாது, ரூபாய் 1200 ஓய்வூதியம் ஏற்பதற்கில்லை, வாரிய முடிவு படி 2000 மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் புதுச்சேரி மாநிலம் போல் தீபாவளி போனஸ் தலா 5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட சங்கத்தினர் புதியம்புத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புதியம்புத்தூர் தபால் நிலையத்திற்கு சென்று தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் வன்னியராஜ் திருப்பதி காளியப்பன் உலகநாதன் சோலையம்மாள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆன் மற்றும் பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.