ஓட்டப்பிடாரம் அருகே மது போதையில் பேருந்தில் இருந்து இறங்கிய நபர் படுகாயம்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புவனேஸ்வரி மருத்துவமனை அருகில் வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் இறங்கிய நபர் படுகாயம்.

நேற்று இரவு 8 மணி அளவில் (55 D) TN 72 2022 என்று அரசு பேருந்து ஓட்டப்பிடாரம் புவனேஸ்வரி மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்தது அந்த பஸ்ஸின் ஓட்டுனராக பாலசுப்பிரமணியன் (வயது 46 பத்திரகாளி அம்மன் தெரு, தூத்துக்குடி) என்பவரும் முத்துராஜ் (வயது 55 தகப்பனார் பெயர் அய்யாதுரை, தொம்மை மைக்கேல்புரம், மேலப்பாளையம், திருநெல்வேலி)
என்பவர் நடத்துனர் ஆகவும் பணியில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் புவனேஸ்வரி மருத்துவமனை அருகில் வரும் பொழுது வளைவில் வழக்கமாக பஸ் திரும்புவது வழக்கம். இந்த சூழ்நிலையில், சென்ட்ரிங்க் வேலைக்கு சென்று விட்டு அதே பேருந்தில் வந்த மாரிமுத்து (வயது 39, தகப்பனார் லட்சுமணன், வ. உ. சி தெரு, ஒட்டப்பிடாரம்) என்பவர் பஸ்ஸிலிருந்து மது போதையில் இறங்கி உள்ளார்.

அப்பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் விரைந்து வந்து காயமடைந்த வரை உடனடியாக சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

ஓட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp