கோவை கணபதி வரதராஜூலு நகரை சேர்ந்தவர் கண்ணப்பன்(51), தனியார் நிறுவன மேலாளர். இவரது வீட்டில் திருச்சியை சேர்ந்த சரண்யா (37) என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில், சம்பவத்தன்று அந்த பெண் காபியில் தூக்க மாத்திரை கலந்து கண்ணப்பன் மற்றும் அவரது தாயாருக்கு கொடுத்தார். அதனை குடித்த சிறிது நேரத்தில் இருவரும் அயர்ந்து தூங்கி விட்டனர். பின்னர் தூக்கம் தெளிந்து எழுந்து பார்த்த போது, சரண்யாவை காணவில்லை.
வீட்டில் படுக்கையறையில் உடைமைகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம், 3. 5 பவுன் நகை, 2 செல்போன்களை வீட்டு வேலை செய்து வந்த சரண்யா திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து கண்ணப்பன் சரவணம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரண்யாவை தேடி வருகின்றனர். காபியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.