கோவை மாவட்டம் வால்பாறையில் தபால் நிலையம் அமைந்திருக்கும் பகுதியில் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டிடம் இல்லாமல் பொதுமக்கள், மாணவ மாணவிகள், வியாபாரிகள் என அனைவரும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த தபால் நிலைய பேருந்து நிறுத்தமானது மிகவும் முக்கியமான பேருந்து நிறுத்தமாக உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தான் அரசு மருத்துவமனை, காவல் நிலையம், மகளிர் உயர்நிலைப்பள்ளி, தபால் நிலையம், இந்தியன் வங்கி, யூனியன் வங்கி போன்றவற்றிற்கு செல்லக்கூடிய முக்கியமான பேருந்து நிறுத்தமாக உள்ளது. மழைக்காலங்களில் பள்ளி மாணவி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் மிகவும் சிரமப்படும் சூழ்நிலையில் உள்ளனர் இந்த சூழ்நிலையில் அந்த பகுதியில் பேருந்து நிறுத்த நிழல் குடை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு வேலை தொடங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் வேலை தொடங்கப்பட்ட சிறிது காலங்களிலேயே வேலை முழுமையாக நடைபெறாமல் பாதியில் நிறுத்தி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வால்பாறை பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், மாணவ மாணவிகள், வியாபாரிகள், என அனைவரும் இந்த தபால் நிலைய பேருந்து நிறுத்த நிழல் குடை கட்டிடத்தை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றனர் பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்ட இந்த பேருந்து நிறுத்த நிழல் குடை கட்டிடம் மக்களின் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?!…
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.