கோவை குனியமுத்தூரில் சிறுத்தை..?

கடந்த காலங்களில் இருந்த பீதியை போல இந்த முறையும் குனியமுத்தூர் ஜே ஜே நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் மதுக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் வனத்துறையினர் ஜெ ஜெ நகர், அபிராமி நகர் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய புதர்கள், பாழடைந்த கட்டிடங்கள் போன்ற பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

கடந்த காலங்களில் இருந்த பீதி…

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் அருகே இரவு நேரங்களில் உலாவரும் சிறுத்தைகள் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கோவை மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பிள்ளையார்புரம், கோவைபுதூர், குனியமுத்தூர், பி.கே புதூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து வந்தனர். இந்நிலையில் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் வந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாயை அடித்து கொன்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காலையில் இதை கண்ட கல்லூரி ஊழியர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை தற்போது கண்காணித்து வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் சிறுத்தை வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் சிறுத்தையால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp