தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தமிழ்நாடு அரசின் ஊரக வாழ்வாதார இயக்கம் ( மகளிர் திட்டம் ) மூலமாக திட்ட செயல்பாடுகள் தொடர்பான வங்கி மேலாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பயிற்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் பேசியது: ஒரு கிராமம் தன்னிறைவு பெற மகளிர் சுய உதவி குழுக்கள் முக்கியம் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் மேலும் பேரிடர் வெள்ளத்திற்கு பின்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வங்கிகள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில்
வட்டார வளர்ச்சி ஆணையாளர் வசந்தா,
வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி,
உதவி திட்ட அலுவலர் முருகன்,
வட்டார மகளிர் திட்ட இயக்குநர் ஆஷா,
மற்றும் வங்கி மேலாளர்கள் மகளிர் திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.