தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு மாறுவேட போட்டி குழந்தைகளும் பெற்றோர்களும் மகிழ்ச்சி…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு Pre-KG முதல் 2-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு உடை அலங்காரம் மற்றும் மாறுவேட போட்டி நடைபெற்றது

.

இப் போட்டிக்கு திவான்சாபுதூர் திரு பட்டீஸ்வரன் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக
திவான்சாபுதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சிவக்குமார் கலந்து கொண்டார்.

இப்போட்டியில் மொத்தம் 54 மாணவர்கள் கலந்து கொண்டனர் மாணவர்கள் பல் வேறு தெய்வத்திரு உருவங்கள்,தேசத் தலைவர்கள், அறிஞர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் திரு உருவங்களைத் தாங்கி வந்து அவர்தம் கருத்துக்களை அழகாக பதிவு செய்தனர் அதே சமயம் ஒவ்வொரு குழந்தைகள் பேசும் போதும் அவர்களின் பேச்சைக் கேட்டு பார்வையாளர்கள் மெய் மறந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

போட்டியின் இறுதியில்
விழாவில் கலந்து கொண்ட மற்றும் பரிசு பெற்ற மாணவர்களுக்கு விழா தலைவர் திரு பட்டீஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினர் சிவக்குமார் ஆகியோர் குழந்தைகளை பாராட்டி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.

மேலும் குழந்தைகளை பள்ளியின் தாளாளர் திரு சண்முகம், செயலாளர் திருமதி உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் திரு ரவிச்சந்திரன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழக துணை தலைமை நிருபர், பொள்ளாச்சி

-சுரேஷ்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp